கோவை: கோவை பீளமேடு பகுதியில் தொடரும் திருட்டு சம்பவத்தால், அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது. மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டை உடைத்து, கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கோவை: கோவை பீளமேடு பகுதியில் தொடரும் திருட்டு சம்பவத்தால், அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது. மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டை உடைத்து, கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியில் தொடர்ந்து வீடுகளை உடைத்து திருடும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மருத்துவக் கல்லூரி பேராசிரியருடைய வீட்டை உடைத்து. உள்ளே சென்று தங்க நகை, வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து நிகழும் இந்த திருட்டு சம்பவத்தால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது...
‘‘கோவை பீளமேடு சேரன் மாநகரில் உள்ள குமுதம் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(45). இவர் கடந்த நான்கு மாதங்களாக மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறார். கோவை மருத்துவக் கல்லூரியில் சீனியர் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஐந்தாம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, மகள் கல்லூரி சேர்க்கை தொடர்பாக குடும்பத்துடன் அகமதாபாத் சென்றுவிட்டார்.
நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, செந்தில்குமார் பீளமேடு குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு பகுதியில் தொடர்ந்து வீடுகளை உடைத்து திருடும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மருத்துவக் கல்லூரி பேராசிரியருடைய வீட்டை உடைத்து. உள்ளே சென்று தங்க நகை, வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து நிகழும் இந்த திருட்டு சம்பவத்தால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது...
‘‘கோவை பீளமேடு சேரன் மாநகரில் உள்ள குமுதம் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(45). இவர் கடந்த நான்கு மாதங்களாக மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறார். கோவை மருத்துவக் கல்லூரியில் சீனியர் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஐந்தாம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, மகள் கல்லூரி சேர்க்கை தொடர்பாக குடும்பத்துடன் அகமதாபாத் சென்றுவிட்டார்.
நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, செந்தில்குமார் பீளமேடு குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.