கோவை: வால்பாறையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அரசு மருத்துவமனைக்கு புதிதாக ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்தார். மேலும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவிகள் மற்றும் பொருட்கள் வழங்கினார்.
கோவை: வால்பாறையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அரசு மருத்துவமனைக்கு புதிதாக ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்தார். மேலும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவிகள் மற்றும் பொருட்கள் வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தார்.

வால்பாறை காந்தி சிலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் வெண்டிலட்டர் பொருத்திய அவசர ஊர்தி வாகனத்தை வால்பாறை சுகாதார மருத்துவர் பாபு லட்சுமணன் அவர்களிடம் வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு காலங்களில் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டடத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் சுமார் 500 பேர்கள் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 110 பேர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் ஐந்து கிலோ அரிசி, வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் அனைத்தும் வழங்கப்பட்டது.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருமலை எஸ்டேட் பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் ஆறு பேர் வீடு மின் கசிவால் தீப்பிடித்து எரிந்து வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தன. அவர்களுக்கு கட்டில், பீரோ ஆகியவைகள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வழங்கினார்.
இந்நிகழ்வில் வால்பாறை அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கித் தலைவர் அமீது, பொன் கணேசன், செந்தில், சௌந்தரராஜ், சலாவுதீன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தார்.
வால்பாறை காந்தி சிலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் வெண்டிலட்டர் பொருத்திய அவசர ஊர்தி வாகனத்தை வால்பாறை சுகாதார மருத்துவர் பாபு லட்சுமணன் அவர்களிடம் வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு காலங்களில் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டடத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் சுமார் 500 பேர்கள் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 110 பேர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் ஐந்து கிலோ அரிசி, வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் அனைத்தும் வழங்கப்பட்டது.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருமலை எஸ்டேட் பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் ஆறு பேர் வீடு மின் கசிவால் தீப்பிடித்து எரிந்து வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தன. அவர்களுக்கு கட்டில், பீரோ ஆகியவைகள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வழங்கினார்.
இந்நிகழ்வில் வால்பாறை அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கித் தலைவர் அமீது, பொன் கணேசன், செந்தில், சௌந்தரராஜ், சலாவுதீன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.