வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி சார்பில் புதிய ஆம்புலன்ஸ் வாகனம் துவக்க விழா!

கோவை: வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி சார்பில் புதிய ஆம்புலன்ஸ் வாகனம் துவக்க விழா நடைபெற்றது.


கோவை: வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி சார்பில் புதிய ஆம்புலன்ஸ் வாகனம் துவக்க விழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றவர் அதிமுகவைச் சேர்ந்த அமுல் கந்தசாமி. இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வால்பாறை மக்களின் அவசர உதவிக்காக ஆக்சிசன் வசதியுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை தனது சொந்த செலவில் வாங்கி வழங்குவதாக அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தான் கூறிய வாக்குறுதிப்படி புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி, அதில் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் அத்தியாவசிய கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், பணிகள் நடைபெற்று வாகனம் இன்று கிடைக்கப்பெற்றது. இதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வாகனத்தின் துவக்க விழா இன்று வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து சக்கர நாற்காலியை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு மருத்துவரிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு நகர வங்கி தலைவர் வால்பாறை வீ அமீது, சலாவுதீன், வழக்கறிஞர் ஆர் ஆர் பெருமாள், எஸ் கே எஸ் பாலு, பொன் கணேஷ் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...