கோவை: ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அழைக்கப்பட்டது.
கோவை: ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அழைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும், 7 நாட்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தென் கிழக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி சார்பில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ்விடம் கோரிக்கை மனு இன்று அளிக்கப்பட்டது.
கிராம சபையில் முன்வைக்கப்படும் ஊராட்சியின் வரவு, செலவு அறிக்கை வங்கி கணக்கு புத்தகங்கள், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கிராம மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும், கிராம நலன் கருதி மக்கள் முன் வைக்கப்படும் கோரிக்கைகளை, முறையாக தீர்மானங்களாக பதிவு செய்ய வேண்டும்.
தீர்மான நகல் பொதுமக்கள் பார்வைக்கு இடம்பெறச் செய்ய வேண்டும். கிராமசபை கூட்டங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும், 7 நாட்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தென் கிழக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி சார்பில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ்விடம் கோரிக்கை மனு இன்று அளிக்கப்பட்டது.
கிராம சபையில் முன்வைக்கப்படும் ஊராட்சியின் வரவு, செலவு அறிக்கை வங்கி கணக்கு புத்தகங்கள், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கிராம மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும், கிராம நலன் கருதி மக்கள் முன் வைக்கப்படும் கோரிக்கைகளை, முறையாக தீர்மானங்களாக பதிவு செய்ய வேண்டும்.
தீர்மான நகல் பொதுமக்கள் பார்வைக்கு இடம்பெறச் செய்ய வேண்டும். கிராமசபை கூட்டங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.