கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தையல் கலைஞர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நிவாரண உதவிகள் வழங்கினார்.
கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தையல் கலைஞர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நிவாரண உதவிகள் வழங்கினார்.
கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நகர செயலாளர் மயில் கணேசன் தலைமை வகித்தார். கூட்டுறவு வங்கித்தலைவர் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.ஹமீது முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள தையல் கலைஞர்களுக்கு அரிசி மளிகை பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வழங்கினார்.
மேலும், இவ்விழாவில் கருமலை தேயிலைத் தோட்டத்தில் தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு கட்டில், பீரோ, மெத்தை ஆகியவற்றையும் வழங்கினார். தொடர்ந்து முன்கள பணியாளர்களுக்கும், கட்டிட தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நிவாரண உதவி வழங்கினார்.
இவ்விழாவில் நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ அமீது, இளைஞர் பாசறை சலாவுதீன், வழக்கறிஞர் RR.பெருமாள், பொன் கணேஷ், எஸ் கே எஸ் பாலு மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட தையல் கலைஞர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நகர செயலாளர் மயில் கணேசன் தலைமை வகித்தார். கூட்டுறவு வங்கித்தலைவர் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.ஹமீது முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள தையல் கலைஞர்களுக்கு அரிசி மளிகை பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வழங்கினார்.
மேலும், இவ்விழாவில் கருமலை தேயிலைத் தோட்டத்தில் தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு கட்டில், பீரோ, மெத்தை ஆகியவற்றையும் வழங்கினார். தொடர்ந்து முன்கள பணியாளர்களுக்கும், கட்டிட தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நிவாரண உதவி வழங்கினார்.
இவ்விழாவில் நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ அமீது, இளைஞர் பாசறை சலாவுதீன், வழக்கறிஞர் RR.பெருமாள், பொன் கணேஷ், எஸ் கே எஸ் பாலு மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட தையல் கலைஞர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.