கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.
அதில், சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனை இன்று மாலை 5:30 மணிக்கு முடிவடைந்தது என புறநகர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, லஞ்சஒழிப்பு துறையினர், ஜெயசீலன் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனை இன்று மாலை நிறைவடைந்தது.
இச்சோதனையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் இருந்து பாதுகாப்பு பெட்டக சாவி மட்டும் கைப்பற்றப்பட்டது. பணம் மற்றும் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும், அதை உறுதி செய்து அதிகாரிகள் கையெழுத்திட்டு அறிக்கை அளித்துள்ளனர்.
அந்த அறிக்கையின் நகலைச் செய்தியாளர்கள் கேட்டபோது, அதை தற்போது கொடுக்க முடியாது என்று தெரிவித்தார் வழக்கறிஞர் தாமோதரன். அவர் பேசுகையில் எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று கட்சி நிர்வாகிகள் கோஷமிட்டனர்.