கோவை: பொள்ளாச்சி அருகே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை சோதனையில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், இன்று கோவையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக ஆனைமலை அருகே உள்ள காளியா புரம் கிராமத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசனின் நண்பர் எனக் கருதப்படும் திருமலை சாமி என்பவரது மளிகைக் கடை மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை நேற்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது திருமலை சாமியின், சொத்து விவரங்கள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டன. காலை தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மாலை சுமார் 7-மணிவரை நடைபெற்றது.
காளியாபுரம் கிராமத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை காரணமாக, பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், இன்று கோவையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக ஆனைமலை அருகே உள்ள காளியா புரம் கிராமத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசனின் நண்பர் எனக் கருதப்படும் திருமலை சாமி என்பவரது மளிகைக் கடை மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை நேற்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது திருமலை சாமியின், சொத்து விவரங்கள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டன. காலை தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மாலை சுமார் 7-மணிவரை நடைபெற்றது.
காளியாபுரம் கிராமத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை காரணமாக, பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.