கோவை: வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் வால்பாறை வேன், கார் உரிமையாளர் சங்கத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் வால்பாறை வேன், கார் உரிமையாளர் சங்கத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் வால்பாறையிலுள்ள 7th haven டாக்ஸி டெம்போ ஓட்டுநர் சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டம் காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் மறு உத்தரவு வரும்வரை சுற்றுலா பயணிகளை வாகனங்களில் ஏற்றிச்செல்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும். ஒருவேளை பேருந்துகளில் அத்துமீறி சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்கு வந்தாலும் அவர்களைப் பற்றிய தகவலையும் தெரியப்படுத்த வேண்டும். மீண்டும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க அதற்கான உரிய உத்தரவு வந்தாலும் திருமணமாகாத ஆண்-பெண் யாரேனும் தங்களின் வாகனங்களில் ஏற்றிச் செல்ல நேர்ந்தால் அவர்களை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். சந்தேகம் ஏற்படும் விதமாக அவர்கள் நடந்து கொண்டாலோ அல்லது வேறெதாவது கிரிமினல் குற்றச்சம்பவங்கள் செய்வது பற்றி தெரியவந்தாலோ உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவேண்டும்.
அதில் மிக முக்கியமாக மலைப்பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் எந்த ஒரு குற்றச்சம்பவங்களும் நடைபெறாமலிருக்கவும் அவைகளைத் தடுக்கவும் காவல் துறையினருக்கு வாகன ஓட்டிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் காவல் ஆய்வாளர் அனைவரிடமும் கேட்டுக்கொண்டு காவல் துறையினரின் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சங்கத்தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாபு, செயலாளர் பிரபு, பொருளாளர் முனீஸ்வரன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் விஸ்வநாதன் செயற்குழு உறுப்பினர்கள் மனோஜ் மற்றும் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் வால்பாறையிலுள்ள 7th haven டாக்ஸி டெம்போ ஓட்டுநர் சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டம் காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் மறு உத்தரவு வரும்வரை சுற்றுலா பயணிகளை வாகனங்களில் ஏற்றிச்செல்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும். ஒருவேளை பேருந்துகளில் அத்துமீறி சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்கு வந்தாலும் அவர்களைப் பற்றிய தகவலையும் தெரியப்படுத்த வேண்டும். மீண்டும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க அதற்கான உரிய உத்தரவு வந்தாலும் திருமணமாகாத ஆண்-பெண் யாரேனும் தங்களின் வாகனங்களில் ஏற்றிச் செல்ல நேர்ந்தால் அவர்களை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். சந்தேகம் ஏற்படும் விதமாக அவர்கள் நடந்து கொண்டாலோ அல்லது வேறெதாவது கிரிமினல் குற்றச்சம்பவங்கள் செய்வது பற்றி தெரியவந்தாலோ உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவேண்டும்.
அதில் மிக முக்கியமாக மலைப்பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் எந்த ஒரு குற்றச்சம்பவங்களும் நடைபெறாமலிருக்கவும் அவைகளைத் தடுக்கவும் காவல் துறையினருக்கு வாகன ஓட்டிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் காவல் ஆய்வாளர் அனைவரிடமும் கேட்டுக்கொண்டு காவல் துறையினரின் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சங்கத்தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாபு, செயலாளர் பிரபு, பொருளாளர் முனீஸ்வரன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் விஸ்வநாதன் செயற்குழு உறுப்பினர்கள் மனோஜ் மற்றும் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.