கோவை: கொரோனா பெருந்தொற்று கால பணிச் சுமையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
கோவை: கொரோனா பெருந்தொற்று கால பணிச் சுமையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்கள பணியாளர்களாக மாவட்ட நிர்வாகம் நியமனம் செய்யப்பட்டு, கொரோனா பெருந்தொற்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளிட்ட நான்கு துறை அதிகாரிகளும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நெருக்கடி கொடுப்பதால், பணிச்சுமை அதிகரித்து, மன உளைச்சல் ஏற்படுவதாகக் கூறி, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட சூழ்நிலையையும் துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முன்களப்பணியாளர்களாக பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் தங்களுக்கு, அரசு அறிவித்த ஊக்கத்தொகையும் இதுவரை வழங்கப்படாதது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த பணியாளர்கள், கொரோனா பணியிலிருந்து மாவட்ட நிர்வாகம் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்கள பணியாளர்களாக மாவட்ட நிர்வாகம் நியமனம் செய்யப்பட்டு, கொரோனா பெருந்தொற்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளிட்ட நான்கு துறை அதிகாரிகளும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நெருக்கடி கொடுப்பதால், பணிச்சுமை அதிகரித்து, மன உளைச்சல் ஏற்படுவதாகக் கூறி, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட சூழ்நிலையையும் துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முன்களப்பணியாளர்களாக பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் தங்களுக்கு, அரசு அறிவித்த ஊக்கத்தொகையும் இதுவரை வழங்கப்படாதது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த பணியாளர்கள், கொரோனா பணியிலிருந்து மாவட்ட நிர்வாகம் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.