கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எல்.பி.எஃப் தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு சங்கத்தின் சார்பாக வால்பாறையிலுள்ள காந்தி சிலை பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எல்.பி.எஃப் தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு சங்கத்தின் சார்பாக வால்பாறையிலுள்ள காந்தி சிலை பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வால்பாறையில் உள்ள எல்.பி.எஃப். சங்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார் தலைமையில் தலைவர் கோழிக்கடை கணேசன், ஏஐடியுசி தாலுகா செயலாளர் மோகன், விடுதலைச்சிறுத்தைகள் வீரமணி, மதிமுக தொழிற்சங்கத் தலைவர் கல்யாணி, காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் பேபி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் மற்றும் தொழிலாளர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஜிஎஸ்டி விலைவாசி உயர்வை கண்டித்தும் விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்றவைகளை கண்டித்தும் கைவிட வலியுறுத்தியும் அனைத்து கட்சி தொழிற்சங்கங்கள் தலைவர்கள் கட்சிக் கொடியைப் பிடித்து பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக எல்.பி.எஃப் தொழிற் சங்க நிர்வாகிகள், சிஐடியு நிர்வாகிகள் மற்றும் கூட்டுக்குழு சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
வால்பாறையில் உள்ள எல்.பி.எஃப். சங்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார் தலைமையில் தலைவர் கோழிக்கடை கணேசன், ஏஐடியுசி தாலுகா செயலாளர் மோகன், விடுதலைச்சிறுத்தைகள் வீரமணி, மதிமுக தொழிற்சங்கத் தலைவர் கல்யாணி, காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் பேபி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் மற்றும் தொழிலாளர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஜிஎஸ்டி விலைவாசி உயர்வை கண்டித்தும் விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்றவைகளை கண்டித்தும் கைவிட வலியுறுத்தியும் அனைத்து கட்சி தொழிற்சங்கங்கள் தலைவர்கள் கட்சிக் கொடியைப் பிடித்து பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக எல்.பி.எஃப் தொழிற் சங்க நிர்வாகிகள், சிஐடியு நிர்வாகிகள் மற்றும் கூட்டுக்குழு சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.