கோவை: செல்போன் கடைகள் செயல்பட கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் செல்போன் கடை உரிமையாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: செல்போன் கடைகள் செயல்பட கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் செல்போன் கடை உரிமையாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மக்கள் அதிகமாகக் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் பல்வேறு விற்பனை கடைகளுக்கு நேரம் குறைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் செல்போன் கடை உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் செல்போன் கடைகள் செயல்படக் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் செல்போன் கடை உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
செல்போன் விற்பனையைச் சிறு தொழிலாகச் செய்துவரும் நிலையில், ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வியாபாரம் நலிவடைந்து
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்.
பெரும்பான்மையான செல்போன் வியாபாரம் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனால் கடைகளில் செல்போன் வியாபாரம் குறைவாகவே உள்ளது. அரசிடமிருந்து எங்களுக்கு எந்த சலுகையும் கிடைப்பதில்லை. கடை வாடகை, மின் கட்டணம் இதர செலவுகளைச் சமாளிக்க முடியாததால் கடைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செல்போன் கடைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்து செல்போன் கடை வியாபாரிகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மக்கள் அதிகமாகக் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் பல்வேறு விற்பனை கடைகளுக்கு நேரம் குறைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் செல்போன் கடை உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் செல்போன் கடைகள் செயல்படக் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் செல்போன் கடை உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
செல்போன் விற்பனையைச் சிறு தொழிலாகச் செய்துவரும் நிலையில், ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வியாபாரம் நலிவடைந்து
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்.
பெரும்பான்மையான செல்போன் வியாபாரம் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனால் கடைகளில் செல்போன் வியாபாரம் குறைவாகவே உள்ளது. அரசிடமிருந்து எங்களுக்கு எந்த சலுகையும் கிடைப்பதில்லை. கடை வாடகை, மின் கட்டணம் இதர செலவுகளைச் சமாளிக்க முடியாததால் கடைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செல்போன் கடைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்து செல்போன் கடை வியாபாரிகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.