கோவை: பல்லடம், சுல்தான்பேட்டை பகுதிகளில் ஆயக்கட்டு நிலங்களாக இருந்த சில பகுதிகள், நகர்புறங்களாக மாறிவிட்டதால், அந்த நிலங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நீரை மற்ற ஆயக்கட்டு நிலங்களுக்கு பயன்படுத்தும் விதத்தில் திட்டமிடல் குறித்து, அப்பகுதி மக்கள் இன்று திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியை சந்தித்து மனு அளித்தனர்.
கோவை: பல்லடம், சுல்தான்பேட்டை பகுதிகளில் ஆயக்கட்டு நிலங்களாக இருந்த சில பகுதிகள், நகர்புறங்களாக மாறிவிட்டதால், அந்த நிலங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நீரை மற்ற ஆயக்கட்டு நிலங்களுக்கு பயன்படுத்தும் விதத்தில் திட்டமிடல் குறித்து, அப்பகுதி மக்கள் இன்று திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட பின்னர் அவர்களிடம் பேசிய கார்த்திகேய சிவசேனாபதி கூறுகையில், கொங்கு பகுதிகளில் நீரை மையமாக வைத்து பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக பல்லடம், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் கீழ்பவானி பாசனமானாலும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனமானாலும், அந்தந்த ஆயக்கட்டுக்கு சேராத நிலங்கள் இருக்கும் காரணத்தால், குடிநீர் தேவையைக் கூட முழுமையாக பூர்த்திசெய்ய இயலாத சூழல் உள்ளது.
எனவே, அனைத்தையும் கருத்தில் கொண்டு இதன் துறை தொடர்பான அமைச்சர்களிடத்தில் முறையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும், என்று தெரிவித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட பின்னர் அவர்களிடம் பேசிய கார்த்திகேய சிவசேனாபதி கூறுகையில், கொங்கு பகுதிகளில் நீரை மையமாக வைத்து பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக பல்லடம், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் கீழ்பவானி பாசனமானாலும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனமானாலும், அந்தந்த ஆயக்கட்டுக்கு சேராத நிலங்கள் இருக்கும் காரணத்தால், குடிநீர் தேவையைக் கூட முழுமையாக பூர்த்திசெய்ய இயலாத சூழல் உள்ளது.
எனவே, அனைத்தையும் கருத்தில் கொண்டு இதன் துறை தொடர்பான அமைச்சர்களிடத்தில் முறையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும், என்று தெரிவித்தார்.