கோவை: பொள்ளாச்சி அருகே இரண்டு சிறுமிகளை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்த மூன்று இளைஞர்களை போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே இரண்டு சிறுமிகளை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்த மூன்று இளைஞர்களை போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயது மிக்க இரண்டு சிறுமிகளை, அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பட்டீஸ்வரன்(20), ராம்குமார்(19) ஆகிய இருவர் சிறுமிகளை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸார், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டீஸ்வரன், ராம்குமார் மற்றும் இவர்களுக்கு உதவிய நண்பன் ரமேஷ் ஆகிய மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயது மிக்க இரண்டு சிறுமிகளை, அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பட்டீஸ்வரன்(20), ராம்குமார்(19) ஆகிய இருவர் சிறுமிகளை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸார், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டீஸ்வரன், ராம்குமார் மற்றும் இவர்களுக்கு உதவிய நண்பன் ரமேஷ் ஆகிய மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.