பொள்ளாச்சி அருகே சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது..!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்து சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்து சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூர் அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மனோஜ்(23). இவர், பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் உள்ள நண்பரை சந்திக்க செல்வது வழக்கம். அப்போது நண்பரின் வீட்டின் அருகே வசிக்கும் 10-ஆம் வகுப்பு முடித்த, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில், கடந்த, 16-ஆம் தேதி சிறுமியைக் காணவில்லை என கூறி சிறுமியின் பெற்றோர், தாலுகா போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். மனோஜ் மொபைல் எண்ணை வைத்து சோதனை செய்தபோது சிங்காநல்லூரில் இருப்பது தெரிய வந்தது.

மேலும், சிறுமிக்கு ஆசை வார்த்தையைக் கூறி திருமணம் செய்ய மனோஜ் முயற்சித்தது தெரிய வந்தது. இதனையடுத்து, மனோஜை, தாலுகா போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...