சர்ச்சையான ஆச்சி விவகாரம்: மன்னிப்பு கோரினார் அமைச்சர் செல்லூர் ராஜு

காரைக்குடி ஆச்சிகள் குறித்து நான் கூறிய கருத்து நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தியிருப்பதால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

காரைக்குடி ஆச்சிகள் குறித்து நான் கூறிய கருத்து நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தியிருப்பதால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

காலா பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, நதி நீர் இணைப்புதான் தனது வாழ்நாள் கனவு.நேரம் வரட்டும் ஆண்டவன் துணையுடன் மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நல்ல நேரம் பிறக்கும் எனப் பேசியிருந்தார். இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், நதிநீர் இணைப்பு குறித்து ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழகத்தில் அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. வேண்டுமென்றால் காரைக்குடி ஆச்சியைப் பிடிக்கலாம் என்று கூறியிருந்தார்.

இது நகரத்தார் சங்கம் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திருமணமான பெண்களை ஆச்சி என்று அழைக்கும் மரியாதைக்குரிய வார்த்தையை அமைச்சர் கேலி செய்துள்ளார் என்று காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் அமைச்சருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினர்.

இதுகுறித்து மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்," நான் நகரத்தார் சமூகத்தை மதிக்கிறேன். நான் கூறிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அப்படி பேசவில்லை. நகரத்தார் சமூகம் மனம் புண்பட்டிருப்பதால் மிகவும் வருந்துகிறேன்," இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...