“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டுமே திமுகவால் ஒதுக்கப்பட்டுள்ளதாக கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.


கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்சார தேவைக்கேற்ப தேவையான மின்கட்டமைப்பு வசதிகளை கடந்த தி.மு.க அரசு உருவாக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

மின்வெட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் 3,500 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே கையாளும் திறன் உள்ள நிலையில், தற்போது 5,000 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை நம்பியே கடந்த தி.மு.க ஆட்சி செயல்பட்டதாகவும், கூடுதலாக போதிய பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அவர், மேகதாது அணை கட்டக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழக முதல்வர் உறுதியாக இருப்பதாகவும், தமிழகத்தின் உரிமைக் குரலை பிரதமருக்கு கடிதங்கள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். காவிரி நீர் விவகாரத்திலும், கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால், போதிய நீர் கிடைத்த பிறகே அணை திறக்கப்படும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் எந்த முடிவையும் தெரிவிக்க முடியாது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது கட்சித் தலைவர் விஜய் முடிவு செய்வார். இதுதொடர்பாக பனையூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

சேலத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதியளித்த அவர், எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் விசாரணைக்குப் பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஊடகச் செய்திகளின் அடிப்படையில் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு விஜய் சென்றது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ஆலயங்களுக்கு அனைவரும் செல்வது இயல்பான ஒன்று என்றும், அதேபோல் விஜயும் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், "சினிமா பிரபலங்கள் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார்கள் என்று கூறுபவர்கள், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் யார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல், மாணவிகளுக்கான "சிங்கப்பெண் படை" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதை படிப்படியாக விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...