கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிழக்கு மகளிர் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை கோவை கிழக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (34), கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாத கோடை விடுமுறை காலத்தில், அவர் வகுப்பில் பயின்று வந்த சில மாணவர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு அவர் தொடர்ந்து ஆபாசப் பதிவுகளை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவர்களின் செல்போன்களை பெற்றோர் தற்செயலாக சோதனை செய்தபோது, ஆசிரியர் அனுப்பியிருந்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி வளாகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஆசிரியர் பாபுவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யப்பட்டதில், மாணவர்களுக்கு ஆபாசப் பதிவுகள் அனுப்பியதற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாணவர்களுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பியகுற்றச்சாட்டின் பேரில், கோவை கிழக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் பாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கோடை விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி டியூஷன் மற்றும் வகுப்புகள் மூலம் நெருக்கமாக பழகிய மாணவர்களைக் குறிவைத்து அவர் இந்தச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...