சர்ச்சையான ஆச்சி விவகாரம்: மன்னிப்பு கோரினார் அமைச்சர் செல்லூர் ராஜு

காரைக்குடி ஆச்சிகள் குறித்து நான் கூறிய கருத்து நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தியிருப்பதால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

காரைக்குடி ஆச்சிகள் குறித்து நான் கூறிய கருத்து நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தியிருப்பதால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

காலா பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, நதி நீர் இணைப்புதான் தனது வாழ்நாள் கனவு.நேரம் வரட்டும் ஆண்டவன் துணையுடன் மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நல்ல நேரம் பிறக்கும் எனப் பேசியிருந்தார். இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், நதிநீர் இணைப்பு குறித்து ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழகத்தில் அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. வேண்டுமென்றால் காரைக்குடி ஆச்சியைப் பிடிக்கலாம் என்று கூறியிருந்தார்.

இது நகரத்தார் சங்கம் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திருமணமான பெண்களை ஆச்சி என்று அழைக்கும் மரியாதைக்குரிய வார்த்தையை அமைச்சர் கேலி செய்துள்ளார் என்று காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் அமைச்சருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினர்.

இதுகுறித்து மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்," நான் நகரத்தார் சமூகத்தை மதிக்கிறேன். நான் கூறிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அப்படி பேசவில்லை. நகரத்தார் சமூகம் மனம் புண்பட்டிருப்பதால் மிகவும் வருந்துகிறேன்," இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...