காவிரி விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க., தி.மு.க. நாடகம் : தமிழிசை

நீலகிரி : காவிரி விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க., தி.மு.க. நாடகமாடுவதாகப் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : காவிரி விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க., தி.மு.க. நாடகமாடுவதாகப் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க., பூத் கமிட்டி கூட்டம் உதகையில் உள்ள இளம்படுகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நீலகிரி வருகை புரிந்தார். அப்போது, அவருக்குப் படுகர் இன பாரம்பரிய முறைப்படி தலையில் ‘முண்டு கட்டி’ (வெள்ளை நிற துண்டு) வரவேற்பு அளிக்கப்பட்டது. 



அப்போது, அவர் பேசுகையில், "50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் காவிரி பிரச்சினையை விட்டுவிட்டு, தற்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் இப்பிரச்சினையில் 50 ஆண்டுகளாக அக்கறை காட்டவில்லை. ஆனால், பா.ஜ.க., 5 வாரத்திற்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கும். நிரந்தர தீர்விற்காகவே, சில வாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட பாஜக., விடாது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதேபோல, தமிழகத்தில் நியுட்ரினோ திட்டம் கொண்டு வருவது நல்லது. தேனி மாவட்ட மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதை ஒப்புக் கொள்கிறோம். அதனை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் 5,000 முதல் 10,000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த பொதுத்துறை நிறுவனமான எச்.பி.எப்., தொழிற்சாலை மூடப்பட்டது. மீண்டும் இங்கு 5,000 தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், தொழிற்சாலை அமைக்கப்படும். நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலான தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்," இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...