கோவை விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்கும் ஆசிய யானைகள்

கோவை : கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையில் விமான நிலைய நிர்வாகம் ஆசிய யானைகளின் மாதிரிகளை நிறுவ முடிவு செய்துள்ளது.

கோவை : கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையில் விமான நிலைய நிர்வாகம் ஆசிய யானைகளின் மாதிரிகளை நிறுவ முடிவு செய்துள்ளது. 

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கோவை விமான நிலையமும் ஒன்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஏராளமான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விமானப் பயணிகளை கவரும் வகையில் யானை, மான், காங்கேயம் காளைகள் மற்றும் பல்வேறு விலங்குகளின் மாதிரிகளை விமான நிலைய வளாகத்தில் கண்காட்சிக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் ரூ. 58 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக, ஆண், பெண் மற்றும் இரு குட்டிகள் அடங்கிய யானை குடும்பத்தின் மாதிரிகள் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும், அதனை நிறுவுவதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை.

இது தொடர்பாக விமான நிலைய முனைய மேலாளர் ஆர். மகாலிங்கம் சிம்ப்ளிசிட்டியிடம் கூறியதாவது:- இந்த விலங்குகளின் மாதிரிகள் தமிழகம் மற்றும் கோவையின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. காங்கேயம் காளைகள் மற்றும் தஞ்சாவூர் பொம்மைகள் நமது கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் அழகைக் காண வரும் பயணிகளை கவரும் வகையில் இவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார். 

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...