கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், எரியாத விளக்குகளை கண்டறிந்து உடனடி சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


Coimbatore:

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் அமைந்துள்ள தெருவிளக்குகளின் தற்போதைய நிலை குறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் தற்போது சுமார் 1,03,755 தெருவிளக்குகள் உள்ள நிலையில், அவை முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர்.



மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர்கள், மாநகர தலைமைப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், வரி வசூல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் நேற்று இரவு 100 சதவீத ஆய்வை மேற்கொண்டனர்.



ஆய்வின் போது எரியாத தெருவிளக்குகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றை உடனடியாக சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக, மரக்கடை சாலை, மில் ரோடு, பூமார்க்கெட், சுக்கிரவார்பேட்டை மற்றும் காந்திபார்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளின் நிலையை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...