கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோசடி நடைபெறுவதாக எச்சரித்துள்ள கோவை மாவட்ட காவல்துறை, சந்தேக அழைப்புகள் குறித்து 1930-ல் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore:

கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி நடைபெற்று வரும் போலி அழைப்புகள் மற்றும் இணைய மோசடிகள் குறித்து கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் அரசு அதிகாரிகள் அல்லது பள்ளி நிர்வாகத்தினர் எனத் தங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கச் செய்வதாகக் கூறி தொடர்பு கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வங்கி கணக்கு விவரங்கள், ஓடிபி (OTP) எண்கள் மற்றும் முன்பணம் உள்ளிட்ட தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

அரசு அல்லது கல்வி நிறுவனங்கள் உதவித்தொகை பெறுவதற்காக பணம் கோருவதில்லை என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், வங்கி விவரங்கள் மற்றும் ஓடிபி எண்களை யாருடனும் பகிரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உதவித்தொகை தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது இணைய மோசடி முயற்சிகள் குறித்து உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...