கோவை விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்கும் ஆசிய யானைகள்

கோவை : கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையில் விமான நிலைய நிர்வாகம் ஆசிய யானைகளின் மாதிரிகளை நிறுவ முடிவு செய்துள்ளது.

கோவை : கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையில் விமான நிலைய நிர்வாகம் ஆசிய யானைகளின் மாதிரிகளை நிறுவ முடிவு செய்துள்ளது. 

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கோவை விமான நிலையமும் ஒன்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஏராளமான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விமானப் பயணிகளை கவரும் வகையில் யானை, மான், காங்கேயம் காளைகள் மற்றும் பல்வேறு விலங்குகளின் மாதிரிகளை விமான நிலைய வளாகத்தில் கண்காட்சிக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் ரூ. 58 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக, ஆண், பெண் மற்றும் இரு குட்டிகள் அடங்கிய யானை குடும்பத்தின் மாதிரிகள் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும், அதனை நிறுவுவதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை.

இது தொடர்பாக விமான நிலைய முனைய மேலாளர் ஆர். மகாலிங்கம் சிம்ப்ளிசிட்டியிடம் கூறியதாவது:- இந்த விலங்குகளின் மாதிரிகள் தமிழகம் மற்றும் கோவையின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. காங்கேயம் காளைகள் மற்றும் தஞ்சாவூர் பொம்மைகள் நமது கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் அழகைக் காண வரும் பயணிகளை கவரும் வகையில் இவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...