கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 9-ம் தேதி இரவு கோவில் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக நுழைந்த நபர் ஒருவர், அங்கு இருந்த சுமார் ஒன்றே முக்கால் அடி உயரமுள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடியதாக கூறப்படுகிறது. பின்னர், சிலையை வெள்ளை நிற பையில் மறைத்து வைத்து கோவிலில் இருந்து வெளியேற முயன்றுள்ளார்.



அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த கோவில் அர்ச்சகர்கள், ஜோதிபுரத்தைச் சேர்ந்த சதாசிவம் (68) மற்றும் குமாரசாமி ஆகியோரின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, அவரது பையை சோதனையிட்டபோது, அதில் திருடப்பட்ட விநாயகர் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த நபரையும் மீட்கப்பட்ட சிலையையும் பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிலை திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர் சங்கனூர் சாலையைச் சேர்ந்த நடராஜன் (54) என்பது தெரியவந்தது.

பின்னர், நடராஜனை கைது செய்த போலீசார், அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

காவல் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோவிலில் துணிகரமாக நடைபெற்ற திருட்டு முயற்சி அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...