நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானைகளின் புத்துணர்வு முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று முதல் யானை சவாரி தொடங்கியது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானைகளின் புத்துணர்வு முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று முதல் யானை சவாரி தொடங்கியது.

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் உள்ள 24 வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கடந்த 48 நாட்களாக நடைபெற்றது. இந்த முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று முதல் யானை சவாரி தொடங்கியது. இதில், குறைவான சுற்றுலாப் பயணிகளே கலந்து கொண்டு சவாரி சென்று மகிழ்ந்தனர். முதல்நாளான இன்று யானை சவாரி சற்று மந்தமடைந்து காணப்பட்டாலும், இனி வரும் காலங்களில் யானை சவாரியை மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புத்துணர்வு முகாமில் இருந்த வளர்ப்பு யானைகளின் உடல் எடை திறன், வரும் வார நாட்களில் சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் உள்ள 24 வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கடந்த 48 நாட்களாக நடைபெற்றது. இந்த முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று முதல் யானை சவாரி தொடங்கியது. இதில், குறைவான சுற்றுலாப் பயணிகளே கலந்து கொண்டு சவாரி சென்று மகிழ்ந்தனர். முதல்நாளான இன்று யானை சவாரி சற்று மந்தமடைந்து காணப்பட்டாலும், இனி வரும் காலங்களில் யானை சவாரியை மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புத்துணர்வு முகாமில் இருந்த வளர்ப்பு யானைகளின் உடல் எடை திறன், வரும் வார நாட்களில் சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.