டியூசனுக்கு சென்ற பள்ளி மாணவனைக் கடத்த முயற்சி

திருப்பூரில் பள்ளி மாணவனை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்று பின்னர் அந்த மாணவன் தப்பி வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர், ஜனவரி 9

திருப்பூரில் பள்ளி மாணவனை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்று பின்னர் அந்த மாணவன் தப்பி வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் அருகே உள்ளது சீனிவாசா நகர். இங்கு குடியிருந்து வருபவர்கள் செந்தில்- அனுராதா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கரிகாலன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருப்பூருக்கு குடும்பத்துடன் குடியேறி லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இதனால், அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அனுராதா இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் கரிகாலன் வழக்கம் போல் அருகில் டியூசனுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சைக்கிள் பஞ்சராகி விடவே தள்ளிக்கொண்டு நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக முகத்தை மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென கரிகாலனை வாயை பொத்தி இருசக்கரவாகனத்தில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது ஒருகட்டத்தில் தனக்கு பின்னாள் அமர்ந்திருந்த கடத்தல்காரனின் கையை சிறுவன் கடித்துள்ளான். இதனை அடுத்து அங்குள்ள பேக்கரி முன்பாக சிறுவனை இறக்கிவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்களிடம் தான் கடத்தப்பட்டு தப்பி வந்த சம்பவம் குறித்து கரிகாலன் தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், இதுகுறித்து 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் வீட்டருகே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதும், அவர்கள் வெளியூர் சென்றுள்ளதாள் திரும்பி வந்த பிறகு வீடியோ பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...