டியூசனுக்கு சென்ற பள்ளி மாணவனைக் கடத்த முயற்சி

திருப்பூரில் பள்ளி மாணவனை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்று பின்னர் அந்த மாணவன் தப்பி வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர், ஜனவரி 9

திருப்பூரில் பள்ளி மாணவனை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்று பின்னர் அந்த மாணவன் தப்பி வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் அருகே உள்ளது சீனிவாசா நகர். இங்கு குடியிருந்து வருபவர்கள் செந்தில்- அனுராதா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கரிகாலன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருப்பூருக்கு குடும்பத்துடன் குடியேறி லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இதனால், அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அனுராதா இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் கரிகாலன் வழக்கம் போல் அருகில் டியூசனுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சைக்கிள் பஞ்சராகி விடவே தள்ளிக்கொண்டு நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக முகத்தை மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென கரிகாலனை வாயை பொத்தி இருசக்கரவாகனத்தில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது ஒருகட்டத்தில் தனக்கு பின்னாள் அமர்ந்திருந்த கடத்தல்காரனின் கையை சிறுவன் கடித்துள்ளான். இதனை அடுத்து அங்குள்ள பேக்கரி முன்பாக சிறுவனை இறக்கிவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்களிடம் தான் கடத்தப்பட்டு தப்பி வந்த சம்பவம் குறித்து கரிகாலன் தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், இதுகுறித்து 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் வீட்டருகே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதும், அவர்கள் வெளியூர் சென்றுள்ளதாள் திரும்பி வந்த பிறகு வீடியோ பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...