நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி. ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரு கின்றன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமைதோறும் சிறப்பு முகாம் நடத்த, சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு ஏற்படுத்தும் கொசுக்கள் இல்லை என்றாலும், சமவெளிப் பகுதிக்குச் சென்று வருபவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தளில் இன்று(அக்.,27) டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சாக்கடைகளில் தேங்கி இருக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரு கின்றன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமைதோறும் சிறப்பு முகாம் நடத்த, சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு ஏற்படுத்தும் கொசுக்கள் இல்லை என்றாலும், சமவெளிப் பகுதிக்குச் சென்று வருபவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தளில் இன்று(அக்.,27) டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சாக்கடைகளில் தேங்கி இருக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.