உதகை நகராட்சியில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி. ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு செய்தார். 



தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரு கின்றன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமைதோறும் சிறப்பு முகாம் நடத்த, சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு ஏற்படுத்தும் கொசுக்கள் இல்லை என்றாலும், சமவெளிப் பகுதிக்குச் சென்று வருபவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தளில் இன்று(அக்.,27) டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து  ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சாக்கடைகளில் தேங்கி இருக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...