அப்பல்லோ மருத்துவர் ரெட்டி கூறிதான் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிந்துகொண்டோம்- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் ரெட்டி, சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது, மருத்துவமனை மருத்துவர் ரெட்டி, சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர் போன்ற அங்கேயே தங்கியிருந்தவர்களிடம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம். உடல்நிலை குறித்து அங்கேயே தங்கி இருந்தவர்களிடம் விசாரித்துதான் வந்திருக்கின்றோம்.

தற்போதைய தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து டி.டி.வி.தினகரன் சொல்லும் வார்த்தைகள் மூலமாக அவர் அவரது தரத்தை வெளிப்படுத்துகிறார். தினகரன் மீண்டும் அதிமுக-வில் இணைய "காலம் பதில் சொல்லும்".



ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க முதலமைச்சர் உத்திரவிட்டு இருக்கின்றார். இதில், சிறந்த விமர்சனங்களுக்கு அப்பாற்றபட்ட நீதிபதி விசாரணை கமிஷனில் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் சி.பி.ஐ விசாரணை என்ற தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது குறித்து அவரிடம்தான் கேட்க வேணடும்.

மேலும், ஜெனீவாவில் வைகோ மீதான தாக்குதல் முயற்சியை தொடர்ந்து அவருக்கு அங்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் நிச்சயம் கண்டனம் தெரிவித்திருப்போம்.

இவ்வாறு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...