அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது எனக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் காவல் ஆணையரிடம் மனு

மதச்சார்பின்மையை உறுதி செய்யும் விதமாக அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடக்கூடாது என்று திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். 

இது குறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் புறநகர மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நமது நாடு மதச்சார்பற்றது என்று நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புறையே கூறுகிறது. மதச்சார்பின்மை கொள்கைகளுக்கு முரணாக பல்வேறு அரசுத்துறை, பொதுத்துறை வளாகங்களில் மத விழாக்களும், பூஜைகளும் சமீபகாலமாக அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முந்தைய காலகட்டங்களில் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இது போன்ற மத விழாக்கள் கொண்டாடக்கூடாது என்று உத்தரவிட்டபோதும் தொடர்ந்து மத விழாக்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மத வழிபாடுகள் நடத்தக் கூடாது. உங்கள் துறை அலுவலகங்களில் இது போன்ற மத வழிபாடுகளை கடைபிடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.



இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...