கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் அக்.,4 வரை நீட்டிப்பு - உச்சநீதிமன்றம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது, சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது. வெளிநாட்டைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு மத்திய அரசின் அன்னிய முதலீட்டு வாரியம் 2007ல் அனுமதி அளித்தது. அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தின் உதவியுடன், இந்த அனுமதி கிடைக்க கார்த்தி நடவடிக்கை மேற்கொண்டதாக கடந்த மே 15-ம் தேதி தனது முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, கார்த்தி ஆஜராகவில்லை. இதையடுத்து கார்த்திகுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து கார்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், லுக் அவுட் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (22.09.2017) மீண்டும் வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகு வெளிநாடுகளில் சொத்து உள்ளதால் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக்கூடாது என வாதிட்டார். இதனையடுத்து கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீசை அக்டோபர் 4 -ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு, விசாரணையை அன்றைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...