கோவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வனவிலங்கு வாரக் கொண்டாட்டம்

கோவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வனவிலங்கு வாரம் எனும் நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு போட்டிகளை நடத்த கோவை வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். வரும் அக்டோபர் முதல் வார ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் போட்டிகளை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக, மாவட்ட வனத்துறை அதிகாரி என்.சதிஷ் எழுதியுள்ள கடிதத்தில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு 3 விதமான போட்டிகள் நடத்தப்படும். வனம் மற்றும் விலங்குகள் குறித்த வினாடி, வினா, விலங்குகளை பாதுகாப்பது தொடர்பான ஓவியப் போட்டி மற்றும் வனவிலங்குகள் குறித்த பேச்சுப்போட்டி நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமே வினாடி வினா போட்டி மற்றும்  வனவிலங்குகள் குறித்த பேச்சுப்போட்டிக்கு தகுதியுடையவர்கள். விலங்குகளை பாதுகாப்பது தொடர்பான ஓவியப் போட்டி பல்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில் 6 குழுக்களாக நடத்தப்படும். 

வனவிலங்கு வாரக் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் வரும் 21-ம் தேதிக்குள் பெயர் பட்டியலை சமர்பிக்க வேண்டும். வாரந்தோறும் போட்டியில் பங்கேற்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை வடகோவையில் உள்ள தமிழக வனத்துறை கழக வளாகத்திற்கு வரவேண்டும். 

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட வன அலுவலகம், கோவை - 0422 - 2456911

எஸ்.சுரேஷ், வனஅதிகாரி, கோவை - 9047066460

எம்.செந்தில், வனஅதிகாரி, மதுக்கரை - 9994449248

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...