தமிழக அரசு குட்கா மற்றும் பான்மசாலாவுக்கு தடைவிதித்துள்ள நிலையிலும் அவ்வகை போதை வஸ்துக்கள் கோவையில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெங்களூரில் இருந்து இரண்டு லாரிகளில் கோவைக்கு கொண்டுவரப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாக்களை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி அந்த லாரிகள் சரவணம்பட்டி அருகே வந்த போது மடக்கிப்பிடித்த போலீசார், லாரி ஓட்டுனர்களான அனுமன் ராம், சுந்தர் ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெங்களூரில் இருந்து இரண்டு லாரிகளில் கோவைக்கு கொண்டுவரப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாக்களை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி அந்த லாரிகள் சரவணம்பட்டி அருகே வந்த போது மடக்கிப்பிடித்த போலீசார், லாரி ஓட்டுனர்களான அனுமன் ராம், சுந்தர் ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.