கோவையில் பிரதேச ராணுவப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் 23-ம் தேதி நடக்கிறது

110-வது பிரதேச ராணுவப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வரும் 23-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் நடக்கும் இந்த ஆட்சேர்ப்பு முகாமின் மூலம் மொத்தம் காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பொதுப்பிரிவில் 8 காலிப் பணியிடங்களும், துப்புரவுப் பணியாளர் பிரிவில் 3 காலிப் பணியிடங்களும் உள்ளன.

தமிழத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், முன்னாள் என்.சி.சி மாணவர்கள், துப்பாக்கிச்சுடும் வீரர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

பிரதேச ராணுவப்படையில் சேர விரும்பும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தோர், ஏற்கனவே பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து மறுப்பின்மை சான்றிதழை பெற்று சமர்பிக்க வேண்டும்.  

விண்ணப்பிப்போரின் வயது வரம்பு 18 முதல் 42 வயது வரையுடைவர்கள் தகுதியானவர்கள்.

மேலும், பிரதேச ராணுவப்படையில் சேர விரும்புவோர் தங்களுடைய 10 புகைப்படங்கள், அடுத்த பயனாளியுடைய (nominee)  5 புகைப்படங்களை கொண்டு வரவேண்டும்.

தொடர்ந்து, ஆதார் கார்டு ( குடும்பத்தினருடையதும் சேர்த்து), பள்ளி மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றுகளின் அசலை எடுத்து வர வேண்டும்.  விண்ணப்பிபோர் திருமணமாயிருப்பின், தனது மனைவியி மதிப்பெண் சான்று, குழந்தை பிறப்புச் சான்று மற்றும் கூட்டு வங்கிக் கணக்கு போன்ற விவரங்களின் அசலை சமர்பிக்க வேண்டும்.

பொதுப்பிரிவுக் காலிப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். துப்புறவு பணியாளருக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவமுள்ளவர்களுககு முன்னுரிமை அளிக்கப்படும். 

உயரம் 160 செ.மீ-க்கு அதிகமாக இருக்க வேண்டும். மார்பின் அளவு 77 செ.மீட்டரும், விரிந்த நிலையில் மார்பு 82 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.

பிரதேச ராணுவப்படையில் சேர விரும்புவோர், முகாமில் நடத்தப்படும் அனைத்து மருத்துவப் பரிசோதனையில் கட்டாயம் தகுதி பெற வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...