தூய்மையே சேவை என்ற இயக்கப் பேரணி கோவை மாவட்ட ஆட்சியரால் துவக்கம்

கோவை மாவட்ட சூலூர் ஊராட்சி ஒன்றியம், அரசூர் ஊராட்சி ஊத்துப்பாளையம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தூய்மையே சேவை இயக்கத்தின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார்.



தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு சாலையோர குப்பைகளை துப்புறவு செய்யும் பணியினை ஆட்சியர் துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-



தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மையே சேவை என்ற இயக்கம் தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கமானது கடந்த 15.09.2017 முதல் 02.10.2017 வரையில் நடைபெறவுள்ளது. இந்த இயக்கத்தின் நோக்கமானது, தூய்மை பாரத இயக்கம் சார்ந்தப்பணிகளை அனைத்து நிலைகளிலும் முடுக்கிவிடுதல், தூய்மை பாரத இயக்கத்தினை ஆற்றல் மிக்கதாக மாற்றுதல், சுகாதாரத்தினை பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தி மேலும் வலுவூட்டுதல். மற்றும் ஒவ்வொரு இந்திய பிரஜையும், இப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து பொது மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், உள்ளுர் முக்கிய பிரமுகர்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர்கள் மூலம் பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.



வீடுகள், சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும் துப்புறவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்பினரால் சுத்தமாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மாவட்ட நிர்வாகத்தால் சுகாதாரத்தினை பேணிக்காக்கின்ற வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

முன்னதாக, சூலூர் ஊராட்சி ஒன்றியம், அரசூர் ஊராட்சி, ஊத்துப்பாளயைம் கிராமத்தில் வீடுகளில் இரட்டை உறிஞ்சு குழலுடன் கூடிய கழிப்பறை கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சந்திரசேகரன், உதவி செயற்பொறியாளர் சுப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ், ஜெயஸ்ரீ உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...