கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வலியுறுத்தி கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று (செப்.,5) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தண்டபானி தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வழியாக பேரணி நடந்தது.



இதில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவதாக உறுதியளித்து ஏமாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வரும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...