கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வலியுறுத்தி கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று (செப்.,5) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தண்டபானி தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வழியாக பேரணி நடந்தது.



இதில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவதாக உறுதியளித்து ஏமாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வரும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...