பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நேரில் ஆய்வு செய்து, பில்லூர்-3 திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் பாதிக்காத வகையில் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள பவானி தடுப்பணையில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனத்தின் சார்பில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கோவை மாநகராட்சியின் பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தடையின்றி மற்றும் விரைவாக குடிநீர் வழங்கும் வகையில் பராமரிப்பு பணிகளை துரிதமாக நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.





இந்த ஆய்வின்போது தலைமை பொறியாளர் விஜயகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் பட்டன், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராம்சங்கர், உதவி செயற்பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, எழில், உதவி பொறியாளர்கள் ஜெயின்ராஜ், சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...