“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதிவு செய்ததாக குற்றம்சாட்டி, குடும்பத்துடன் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.


Coimbatore: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இன்று பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் தெக்கலூரைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கு கோவை கணியூர் பகுதியில் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலம் தொடர்பாக ராஜேந்திரன் என்பவருடன் நீண்டநாள் தகராறு இருந்து வரும் நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி ராஜேந்திரன் மற்றும் ராஜா ஆகியோர் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் வந்து கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கு இருந்தவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள், டி.வி.ஆர்., சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளித்தபோதும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், எதிர் தரப்பின் புகாரின் அடிப்படையில் தங்கள்மீதே வழக்குப் பதிவு செய்துள்ளதாக சித்ரா தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இதனிடையே, கடந்த 30ஆம் தேதி ஜமுனாதேவி என்பவரிடம் தகராறு செய்ததாக மீண்டும் தங்கள்மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் குடும்ப துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிலேயே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“வீட்டில் கருப்பு காரியம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் எவ்வாறு நிலத்திற்குச் சென்று தகராறு செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பிய அவர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என தெரிவித்தனர்.

தங்கள்மீது திட்டமிட்டு பொய் வழக்குப் பதிவு செய்த காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சித்ரா தனது குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...