“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதிவு செய்ததாக குற்றம்சாட்டி, குடும்பத்துடன் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.


Coimbatore: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இன்று பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் தெக்கலூரைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கு கோவை கணியூர் பகுதியில் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலம் தொடர்பாக ராஜேந்திரன் என்பவருடன் நீண்டநாள் தகராறு இருந்து வரும் நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி ராஜேந்திரன் மற்றும் ராஜா ஆகியோர் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் வந்து கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கு இருந்தவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள், டி.வி.ஆர்., சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளித்தபோதும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், எதிர் தரப்பின் புகாரின் அடிப்படையில் தங்கள்மீதே வழக்குப் பதிவு செய்துள்ளதாக சித்ரா தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இதனிடையே, கடந்த 30ஆம் தேதி ஜமுனாதேவி என்பவரிடம் தகராறு செய்ததாக மீண்டும் தங்கள்மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் குடும்ப துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிலேயே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“வீட்டில் கருப்பு காரியம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் எவ்வாறு நிலத்திற்குச் சென்று தகராறு செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பிய அவர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என தெரிவித்தனர்.

தங்கள்மீது திட்டமிட்டு பொய் வழக்குப் பதிவு செய்த காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சித்ரா தனது குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...