கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட்சமாக 69 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 181.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி சராசரியாக 7.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விரிவான விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், நகரப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. ஆனால் பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.


பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட விவரப்படி, கோவை விமான நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் 5.10 மில்லி மீட்டர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சுற்றுவட்டார பகுதிகளில் 15.20 மில்லி மீட்டர், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 11.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 69 மில்லி மீட்டர், பில்லூர் அணைக்கட்டு பகுதியில் 10 மில்லி மீட்டர், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 33 மில்லி மீட்டர், சிறுவாணி அடிவாரத்தில் 24 மில்லி மீட்டர், மதுக்கரை தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 1.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


போத்தனூர் ரயில் நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் 0.60 மில்லி மீட்டர், பொள்ளாச்சி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லி மீட்டர், ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லி மீட்டர், ஆழியாறு சுற்றுவட்டார பகுதிகளில் 1.20 மில்லி மீட்டர், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பகுதிகளில் 3 மில்லி மீட்டர், வால்பாறை தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லி மீட்டர் என பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.


இதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 181.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் நேற்று 7.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...