மாநகராட்சி ஆணையர் அறிவுரையின்படி பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவுரையின்படி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு கவனம் செலுத்தி டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் அறிவுரையின்படி மாநகராட்சி நகர்நல அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 28) மாநகராட்சி மத்திய மண்டலத்தில், 25, 45, 50, 51, 54, 80, 81, 82, 83, 84 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 12 பள்ளிகளிலும், தெற்கு மண்டலத்தில், 76, 78, 86, 87, 89, 90, 91, 92, 94, 95, 96, 100 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 24 பள்ளிகளிலும், வடக்கு மண்டலத்தில், 3, 4, 27, 28, 38, 39, 42, 44 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 11 பள்ளிகளிலும், கிழக்கு மண்டலத்தில், 35, 36, 37, 59, 60, 61, 63, 67, 69, 75 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 2 கல்லூரியும் மற்றும் 34 பள்ளிகளிலும், மேற்கு மண்டலத்தில், 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 19, 20, 21, 22, 23, 24 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 27 பள்ளிகளில் டெங்கு கொசு ஒழிப்பு சம்பந்தமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட பள்ளிகளில், சின்டெக்ஸ் தொட்டிகளில் முறையாக சுத்தம் செய்து கொசுப்புழு உற்பத்தியில்லாமல் பராமரிக்கப்பட்டுள்ளனவா எனவும், சமையலறைகள் சுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா எனவும், பள்ளி வளாகத்தில் உபயோகப்படுத்தப்படாத பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பேப்பர் கப்புகள் அகற்றப்படுகின்றனவா எனவும், பயிற்சிக்காக வைக்கப்பட்டுள்ள டயர்கள் மற்றும் மாடிகளில் மழைநீர் தேங்கி உள்ளனவா எனவும் ஆய்வு செய்து கொசுப் புழுக்களை அழிப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...