பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல்வி உதவித்தொகைகளை அக்கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி அறிமுகப்படுத்தினார்.


Coimbatore: பார்க் கல்விக் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட “Zero G 2026” என்ற இரண்டு நாள் கலாச்சார விழா கோவை கனியூர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று, 30-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் கலாச்சார போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

விழாவின் முதல் நாளில் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் நடிகை, பாடகி மடோனா செபாஸ்டியன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் மற்றும் நடிகர் ரியோ ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கல்வி, விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை கவுரவித்தனர்.

விழாவில் பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி பேசுகையில், “ஒவ்வொரு முன்னாள் மாணவரின் வீட்டிலிருந்தும் ஒரு தொழில்முனைவோர் உருவாக வேண்டும்” என்பதே கல்விக் குழுமத்தின் நோக்கம் என தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு முதல் “நம்பிக்கை கல்வி உதவித்தொகை” மற்றும் “சக்தி கல்வி உதவித்தொகை” ஆகிய இரண்டு புதிய கல்வி உதவித்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

முதற்கட்டமாக, பெற்றோரை இழந்த மாணவர்கள் உயர்கல்வி தொடர உதவும் வகையில் “நம்பிக்கை” கல்வி உதவித்தொகை ஏ.ஐ மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவருக்கு வழங்கப்பட்டது.

அதேபோல், மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி பெற உதவும் நோக்கில் “சக்தி” கல்வி உதவித்தொகை கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு வழங்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...