கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அணைகட்ட உச்சநீதிமன்றம் ஒப்புதல் கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது -நடிகர் சீமான்

கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டக் கூடாது என தமிழகத்தில் அனைவரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழகறிஞர் அணைகட்ட ஒப்புதல் கொடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்; 

அதிமுக இணைப்பே நாட்டுக்கு பிரச்சினையல்ல எனவும் இதையே பேசிக்கொண்டு இருப்பது அருவருப்பானது என தெரிவித்தார். கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டக் கூடாது என தமிழகத்தில் அனைவரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழகறிஞர் அணைகட்ட ஒப்புதல் கொடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது எனவும், பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தொடந்து தடுப்பு அணைகளை கட்டி வருகின்றது. இதனால் தமிழகம் பாலைவனம் ஆகும் நிலையில் அதிமுக இணைப்பு பற்றி பேசிக்கொண்டு இருப்பது சரியல்ல எனவும் அவர் தெரிவித்தார். 

நீட் விவகாரத்தில் பெரும்பாலான மாணவர்கள் பாதிக்கப்படுவதை மட்டும் பேசவேண்டும் என்றவர் நிரந்தரமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் பா.ஜ.க கால் ஊன்ற முடியாது என தெரிவித்தவர். 

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு வலுவான வாதத்தினை முன் வைக்க தவறி விட்டது எனவும், தமிழகம் பெரு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறி வருகின்றது எனவும் தெரிவித்தார். எங்களுக்கு ரஜினி, கமல் தேவையில்லை. காமராஜரும், ஜீவானந்தமும், சிங்காரவேலர் போன்ற தலைவர்கள் தலைவர்கள் விரைவில் உருவாவர்கள் என்று தெரிவித்தார். 

சென்னையில் ரஜினிகாந்த் மனைவி ஆஸ்ரம் பள்ளியில் நடந்தை செய்தியாக கூட ஊடகங்கள் போடவில்லை எனவும், ரஜினிகாந்த் ஆஸ்ரம் பள்ளிக்கு போட்ட பூட்டை முதலில் திறக்கட்டும் பின்னர், நாட்டை காப்பாற்ற ரஜினிகாந்த் வரட்டும் என தெரிவித்தார்.

ஒரு தலைமுறை கோபமாக அரசை பார்த்துக்கொண்டு இருக்கின்றது என்றவர். மெரினாவில் எம்,ஜி.ஆர் சிலை இருக்கிறது, தமிழன் சிவாஜி கணேசன் சிலையை ஏதேதோ காரணம் சொல்லி எடுக்கின்றனர் எனவும் சீமான் குற்றம்சாட்டினார்.

மேகதாது பகுதியில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை அதிர்ச்சியாகவும், வேடிக்கையாகவும் இருக்கின்றது என கூறியவர் மேகதாது விவகாரத்தில் அரசின் செயல்பாடு சரியில்லை என குற்றம் சாட்டினார்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...