யானை மனித மோதல்கள், பயிர் சேதம் தவிர்ப்பதற்காக விவசாயிகள் கேட்கும் நவீன துப்பாக்கியை வழங்க தயாராகும் வனத்துறை. விவசாயிகள் கேட்பதைப் போல துப்பாக்கி உரிமம் வழங்க அரசு நிர்வாகிகள் மறுத்து வந்ததால், யானையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் நலன் கருதியும், பயிர்கள் மற்றும் உயிரிழப்புகள் யானையால் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வனத்துறை புதிய துப்பாக்கி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வன விலங்குகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பைபர் குழாய் துப்பாக்கியின் செயல்பாடு பயன்பாட்டிற்கு எளிதாகவும், குறைவான விலையில் தயாரிக்க முடியும் என்ற காரணத்தால் தமிழக வனத்துறை கோவை பெரிய நாயக்கன்பாளையம் சரகத்திலுள்ள விவசாயிகளுக்கு இதை வழங்க இருக்கிறது.
பைபர் குழாய் துப்பாக்கி குறித்து வனத்துறையினர் கூறுகையில், பைபர் குழாயினுள் கார்பைடு கல் மற்றும் ஐந்து மில்லி நீர் ஊற்றி லைட்டரை கொண்டு பற்ற வைத்தால் வெடி சத்தமும், அழுகிய முட்டை போன்ற தூர் நாற்றமும் வெளிவருவதால், யானைகள் அங்கிருக்க முடியாமல் ஓடும் நிலைக்கு தள்ளப்படும் எனவும் யானையை விரட்ட பயன்படுத்தப்படும் பட்டாசுகள் மற்றும் ஆட்களின் செலவுகளை் குறைக்க வாய்புள்ளது என தெரிவித்தனர். 800 ரூபாயில் தயாரிக்கக் கூடிய இந்த தூப்பாக்கியை விவசாயிகள் எளிதாக வாங்கி பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வன விலங்குகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பைபர் குழாய் துப்பாக்கியின் செயல்பாடு பயன்பாட்டிற்கு எளிதாகவும், குறைவான விலையில் தயாரிக்க முடியும் என்ற காரணத்தால் தமிழக வனத்துறை கோவை பெரிய நாயக்கன்பாளையம் சரகத்திலுள்ள விவசாயிகளுக்கு இதை வழங்க இருக்கிறது.
பைபர் குழாய் துப்பாக்கி குறித்து வனத்துறையினர் கூறுகையில், பைபர் குழாயினுள் கார்பைடு கல் மற்றும் ஐந்து மில்லி நீர் ஊற்றி லைட்டரை கொண்டு பற்ற வைத்தால் வெடி சத்தமும், அழுகிய முட்டை போன்ற தூர் நாற்றமும் வெளிவருவதால், யானைகள் அங்கிருக்க முடியாமல் ஓடும் நிலைக்கு தள்ளப்படும் எனவும் யானையை விரட்ட பயன்படுத்தப்படும் பட்டாசுகள் மற்றும் ஆட்களின் செலவுகளை் குறைக்க வாய்புள்ளது என தெரிவித்தனர். 800 ரூபாயில் தயாரிக்கக் கூடிய இந்த தூப்பாக்கியை விவசாயிகள் எளிதாக வாங்கி பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.