துடியலூர் பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும். தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்புலிகள் அமைப்பின் மாநகர மாவட்ட செயலாளர் தம்பி வினோத் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
பெரியநாய்க்கன்பாளையம் ஒன்றியம், புதுபுதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 35 ஆண்டுகளாக சுமார் 40 அருந்ததியர் மக்கள் குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர். மேற்படி மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு வீட்டு மனைப் பட்டா, மின்சார வசதி, கழிப்பிட வசதி, சாலை வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமலேயே உள்ளது.

மேலும், இந்த ஊரின் தென்புறமும், வடபுறமும் சுமார் 10 செண்ட் அளவிற்கு தனியார்கள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் இம்மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது.
எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேற்குறிப்பிட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்புலிகள் அமைப்பின் மாநகர மாவட்ட செயலாளர் தம்பி வினோத் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
பெரியநாய்க்கன்பாளையம் ஒன்றியம், புதுபுதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 35 ஆண்டுகளாக சுமார் 40 அருந்ததியர் மக்கள் குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர். மேற்படி மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு வீட்டு மனைப் பட்டா, மின்சார வசதி, கழிப்பிட வசதி, சாலை வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமலேயே உள்ளது.

மேலும், இந்த ஊரின் தென்புறமும், வடபுறமும் சுமார் 10 செண்ட் அளவிற்கு தனியார்கள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் இம்மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது.
எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேற்குறிப்பிட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.