துடியலூர் பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி தமிழ்புலிகள் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு

துடியலூர் பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும். தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து தமிழ்புலிகள் அமைப்பின் மாநகர மாவட்ட செயலாளர் தம்பி வினோத் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

பெரியநாய்க்கன்பாளையம் ஒன்றியம், புதுபுதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 35 ஆண்டுகளாக சுமார் 40 அருந்ததியர் மக்கள் குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர். மேற்படி மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு வீட்டு மனைப் பட்டா, மின்சார வசதி, கழிப்பிட வசதி, சாலை வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமலேயே உள்ளது.



மேலும், இந்த ஊரின் தென்புறமும், வடபுறமும் சுமார் 10 செண்ட் அளவிற்கு தனியார்கள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் இம்மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. 

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேற்குறிப்பிட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...