நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா பகுதியினைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களான கவி அரசு மற்றும் இலக்கியா ஆகியோர் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில், தங்கள் வீட்டில் மின்சார வசதி இல்லை என்றும், இன்று போலவே கடந்த 7 வருடங்களாக மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து கடந்த வருடம் கிராம நிர்வாக அதிகாரி ஆய்வு நடத்தியும் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் தங்கள் மனு மீது நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் மின்சார வசதி செய்து தருமாறு அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
அம்மனுவில், தங்கள் வீட்டில் மின்சார வசதி இல்லை என்றும், இன்று போலவே கடந்த 7 வருடங்களாக மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து கடந்த வருடம் கிராம நிர்வாக அதிகாரி ஆய்வு நடத்தியும் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் தங்கள் மனு மீது நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் மின்சார வசதி செய்து தருமாறு அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.