காவல்துறையால் தேடப்படும் நபர்களை கண்டுபிடிப்பதற்கும், திருடு போன வாகனங்களை அடையாளம் கண்டு மீட்கும் வகையில் கோவை மாநகரில் நவீன சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட உள்ளதாக கோவை மாநகர காவல்துறை (போக்குவரத்து) துணை ஆணையர் துரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாநகரில் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காவல்துறையினர் தேடிவரும் குற்றவாளிகளையும், திருடப்பட்ட வாகனங்களை அடையாளம் காணும் வகையிலும் நவீன சிசிடிவி காமிராக்கள் கோவையில் 15 இடங்களில் பொருத்தப்பட உள்ளது.
இந்த காமிரா 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும். காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நபரின் புகைப்படம் காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கும். அந்த நபர் காமிரா பொருத்தப்பட்டிருக்கும் வழியாக செல்லும் போது, அவரின் முகம் பதிவாவதோடு, அவரின் புகைப்படத்தையும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும்.
மேலும், நகரில் திருப்பட்ட வாகனங்களின் பதிவெண்களை உள்ளீடு செய்து வைத்திருப்பதன் மூலம், அந்த வாகனம் காமிராவில் பதிவானால், உடனடியாக அந்த தகவல் காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு அனுப்பப்படும். இதனால், குற்றவாளிகளை மிக எளிதாக பிடிக்க முடியும்.
முதற்கட்டமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ‘செக் போஸ்ட்’ல் அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் இந்த நவீன காமிரா பொருத்தப்பட உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாநகரில் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காவல்துறையினர் தேடிவரும் குற்றவாளிகளையும், திருடப்பட்ட வாகனங்களை அடையாளம் காணும் வகையிலும் நவீன சிசிடிவி காமிராக்கள் கோவையில் 15 இடங்களில் பொருத்தப்பட உள்ளது.
இந்த காமிரா 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும். காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நபரின் புகைப்படம் காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கும். அந்த நபர் காமிரா பொருத்தப்பட்டிருக்கும் வழியாக செல்லும் போது, அவரின் முகம் பதிவாவதோடு, அவரின் புகைப்படத்தையும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும்.
மேலும், நகரில் திருப்பட்ட வாகனங்களின் பதிவெண்களை உள்ளீடு செய்து வைத்திருப்பதன் மூலம், அந்த வாகனம் காமிராவில் பதிவானால், உடனடியாக அந்த தகவல் காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு அனுப்பப்படும். இதனால், குற்றவாளிகளை மிக எளிதாக பிடிக்க முடியும்.
முதற்கட்டமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ‘செக் போஸ்ட்’ல் அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் இந்த நவீன காமிரா பொருத்தப்பட உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.