தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் திருடு போன வாகனங்களை கண்டுபிடிக்க நவீன சிசிடிவி காமிராக்கள்: கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தகவல்

காவல்துறையால் தேடப்படும் நபர்களை கண்டுபிடிப்பதற்கும், திருடு போன வாகனங்களை அடையாளம் கண்டு மீட்கும் வகையில் கோவை மாநகரில் நவீன சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட உள்ளதாக கோவை மாநகர காவல்துறை (போக்குவரத்து) துணை ஆணையர் துரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவை மாநகரில் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காவல்துறையினர் தேடிவரும் குற்றவாளிகளையும், திருடப்பட்ட வாகனங்களை அடையாளம் காணும் வகையிலும் நவீன சிசிடிவி காமிராக்கள் கோவையில் 15 இடங்களில் பொருத்தப்பட உள்ளது.

இந்த காமிரா 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும். காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நபரின் புகைப்படம் காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கும். அந்த நபர் காமிரா பொருத்தப்பட்டிருக்கும் வழியாக செல்லும் போது, அவரின் முகம் பதிவாவதோடு, அவரின் புகைப்படத்தையும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும்.

மேலும், நகரில் திருப்பட்ட வாகனங்களின் பதிவெண்களை உள்ளீடு செய்து வைத்திருப்பதன் மூலம், அந்த வாகனம் காமிராவில் பதிவானால், உடனடியாக அந்த தகவல் காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு அனுப்பப்படும். இதனால், குற்றவாளிகளை மிக எளிதாக பிடிக்க முடியும்.

முதற்கட்டமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ‘செக் போஸ்ட்’ல்  அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் இந்த நவீன காமிரா பொருத்தப்பட உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...